rediff ILAND
Welcome Guest, | Create your own iLand| Sign In  | New User? Get Started
BLOGS
iLand
Blogs
Friends/Contributors
Guestbook  
 
raguveeradayal
thiruppathi

Categories
Religion
Books
What is an RSS feed?
RSS Feed 
paamaran.rediffiland.com/  
Saturday 11 October, 2008
By  raguveeradayal thiruppathi   16:21 | 5/Oct/2007 |  0 Comment(s)
  Add raguveeradayal thiruppathi as Friend     Write to raguveeradayal thiruppathi     Forward this link
திருப்பாதூĨ 5;மாலை


திருப்பாதுகையாயிரம்
1. பாயிரப்பத்ததி

1. பொலிக மாணிறை பூக்கும ரங்கமா
வலவ னேரணி யம்மணி பாதுகை
தலைகு லாவணி தாமணி வள்ளலா
ருலகு நோக்கும டித்துக ளுத்தமர்.

2. உத்தமத் திரும ணாள னுயர்பத நிலையி னுச்சி
இத்தலத் திலக வத்தன் னிலைதவச் சென்னி யேந்தி
அத்திறப் பத்தி நல்லார்க் காதியென் றோத நின்ற
வித்தகப் பரத நம்பிக் காமுதல் வணக்க மீதாம்.

3. வருணமா நளியி னாளும் வளநறும் வகுள நாறுஞ்
சுருதிசீர்ப் பகுதி முந்தைச் சந்தியின் பந்தி பூத்தோ
ரரிபதா வனியு னாம மணிந்தரி சரண நோக்கும்
குருகைமா முனிப ணிந்தே னுன்னையான் துதிக்க வேண்டி.

4. பொன்னிரும் பதியி னின்றுன் போனிலை புகுந்த வாணி
தன்னடைக் கிழமை நாடுந் தகைமுத னடையில் வைய
நன்னருள் பால தென்றே நாறுநன் மதிம லர்ந்த
வன்மிகத் தோன்றல் தெய்வ வாக்கெனக் கருள்வன் பாதூ !

5. நீசனா மெனது சென்னி மீதுமோர் வாசி யின்றித்
தோறா வாச வேதச் சிரமிசைப் பரமன் பாதூ !
வாசநீ கொண்டு மன்னக் கண்டுவான் மீகி போன்றார்
பேசுமுன் பெருமை யேபின் பேசினே னாசை யேறி.
6. நிவந்துபா ருவந்த ரங்க னடிநிலாய் ! படிய நின்கண்
உவந்தவான் மீகி பாட லொக்குமென் னாட றானும்
கவர்ந்துபார் பரவு கங்கை வாரியிற் கலந்த பங்க
மிவர்ந்தவார் தனக்குந் துய்ய வெமுனைக்கும் வாசி யென்னோ ?

7. அன்னதோ ரண்ண லோருன் கண்ணதென் றெண்ணு வண்ணக்
கன்னலா ரழுக்க றுக்கா வகப்புக ழுகப்புக் கூர
நின்னையே வழுத்த யானுன் னின்றுமுன் னின்பா லன்பா
யன்னைநீ யரங்கன் பாலா லபயமெற் கருள்கின் றாயே.

8 கடுகுநின் பரிவி லெண்ணா வடியனென் மதிபு குந்துன்
படியினின் துதியு திக்கும் பரியருள் புரியப் பாதூ !
கடைகால் தனத டிப்பூ நடையினீ நடத்து மாறுன்
படியிதொன் றெனவ ரங்க பதியிவ னொருவன் சான்றே.

9 தாங்கியேஎ ழவனி யாளுந் தனியிறைத் தனத டிச்சீ
ரோங்குமா லொருவ னத்தா ளொருத்திநீ பாது கத்தாய் !
யாங்குமே நடத்தித் தாங்கும் பாங்கய வரனுந் தேரா
ரீங்குவீண் புலமை வீங்கும் பிறர்க்கிது பன்ன வற்றோ?

10 செவிப்பெருந் திருவி ளங்கச் செறிதெருள் விரியுஞ் செந்நாச்
சவிப்பெருஞ் சதிரின் வண்ணச் சாடுவர் பாடு முன்கண்
கவிப்பெருங் கதிமி ழற்றிக் கதையிதுன் பிதற்று பேதைக்
குளிப்பினுக் குவந்து பாதுன் குறிப்பென மதிப்ப ரான்றோர்.

11. அறிவிலே னணவ நின்சீ ரணுவுமே தணிவு றாதே
வறியனே னிறையு முன்னீர் கனைமனத் திருவ னாவேன்
உறியநாச் சுனக னக்கிப் புனிதநீர்க் கங்கை பாதூ !
சிறிதுமே மாரு ணாதே யதனெடு விடாயுந் தீரும்.

12. ஒலிமிகுத் துழலுஞ் சூறா வளிகளு மலைக்க வொண்ணா
வலிமிகுந் தருவை வீழ்த்த வலித்துவா யூது வான்போல்
கலைமிகுங் கவிஞர் செஞ்சொற் கடந்தெழில் காட்டு முன்னைச்
சலமிலென் புகலஞ் சாறே பகரநா வலர்ந கைப்பார்.

13. அய்யமறக் கண்டுபொருண் மேன்மை தன்னோ
டதுமொழியுந் தனது மதித் தண்மை யுந்தன்
மெய்யகமே றரங்கநக ரப்பன் செந்தா
ணிலையணவு மார்வமதே சார்வொன் றாக
நய்யவரை யறைகளறக் கலைத்து நாவே
மலருமிதழ் மதலையென மகிழ்ந்து பாடச்
செய்யருளவ் வடிநிலையே சுவைக்குஞ் செவ்வாய்ச்
சீரினிறை வேங்கடவன் பாடு வானே.

14. நித்திலநே ரொத்திலகு நாதன் பொற்றா
ணிலை ! யுனது தலைவையத் தறைய நின்றேற்
கொத்தனளிர் மதிச்சடையன் சிகரஞ் சாய்த்து
நுகரவெழு மபரிமிதப் பெருமி தத்தார்
புத்தெழிலத் திரிபதகை புவியும் வானும்
புகழநடை விரைவினெகிழ் வேகம் வெள்கு
மத்திறநின் னாரமுதத் தளையி னாதம்
வளங்கொளநா வீறொலிநீ வழங்கு வாயே.

15. ஆடிய நோன்பிலே னாயினு மன்னா
னாடிய பாதுனை நான்முடி சூடிச்
சேடிம யந்நள சேதுவி னூடே
பாடிய வள்ளல ருள்கலந் தேனே.

16. போதமெ ழுந்திரு வேதமொ ழிக்கே
யோதரு மாதவன் பாதுகை யுன்னைப்
பீதியி லாதவென் பேதமை பாடப்
போதிது போகென வப்பனு வப்பன்.

17. நல்கரி பாது !நிற் கென்றொரு கற்பிற்
பல்குவி ருத்திவி கற்புப யக்குந்
தொல்கவி வேங்கட வன்கலை வாணி
மல்களி நீகொள ரங்கினி லாடும்.

18. எண்ணவ னப்பரு நின்னரு ளெண்ண
வென்னுட னற்றொடை கோடியி சைக்கும்
பண்ணல மாயினு மாதிரி காட்டப்
பண்னரி பாதுன தாயிர மீதாம்.

19. மாவொட ரங்கன வைக்கண்வி ழிப்பிற்
பாவிது தன்செவி யாரநு கர்ந்தே
தாவிய ணைக்கம ராடியு னாதங்
கூவுமெ னாமனங் கோயினீ கொள்வாய்.

20. நோற்றியான் பாதுனைப் போற்றுபா மாலையீ
தாற்றலே சாலரங் கேசனார் தாளிணைத்
தோற்றலே சாற்றுமன் னாண்சரண் கொண்மலர்
போற்றுமா தித்தர்பூஞ் சென்னிமேற் போலதே.

Category: Religion | Permalink