rediff ILAND
Welcome Guest, | Create your own iLand| Sign In  | New User? Get Started
Home
iLand
Blogs
Friends/Contributors
Guestbook  
 
raguveeradayal
thiruppathi

Categories
Religion
Books
What is an RSS feed?
RSS Feed
paamaran.rediffiland.com/
Recent Posts
By  raguveeradayal thiruppathi   13:35 | 18/Dec/2007|1 Comment(s)
தயா சதகம்

ஸ்வாமி தேசிகனின் "தயா சதகம்" ஸ்வாமியின் படைப்புகளில் தனிச் சிறப்பு வாய்ந்தது. அதை புது தில்லி வாழ் அன்பில் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி மிக அருமையாகத் தமிழாக்கியிருக்கிறார். படித்து அநுபவியுங்கள்.




Permalink
By  raguveeradayal thiruppathi   13:22 | 15/Dec/2007|0 Comment(s)
Sri Rama Sthothram


Permalink
By  raguveeradayal thiruppathi   01:01 | 17/Oct/2007|0 Comment(s)
திருப்பாதுĨ 5;மாலை

பெருமைப் பத்ததி.

31. யாங்கு யர்ந்தவர் யாவருந் தாழ்வரோ

யாங்கு தாழ்ந்தவர் யாருமு யர்வரோ

ஓங்கு மாதவ ரோம்பும ரங்கனப்

பூங்க ழன்மணி பாதுகை போற்றுவன்.

32. பம்பு மம்பர முற்று மித்தல முற்ற பத்திர மாயினு

மிம்ப ரார்கலி யேழு சேர்ந்துதெ ரித்த லாமசி யாயினுங்

கொம்ப னாயிர வாய னேயவ னோது வானென வாயினும்

கம்ப ரன்மணி பாது கப்பணை தான்வ ரைதலு மேலுமே.

33. ஓது மாமறை கோத றத்தெளி வாகு பாவரு மோகையில்

நாத மேதினிக் காதி னந்தன னாதி காவியந் தன்னொடும்

போத வேதவி யாத னோதியவேத மாகிய பாரதம்

பாதூ ! நின்பரி காணுமெம்மனோர் கண்ணிரெண்டென வொண்ணுமே.

34. மாய னங்கள ரங்க னங்கிரி தாங்கு பாதுகை! யோங்குநிற்

காய நன்றுசு ருக்கு வித்தர வாய்வி ருத்திவி ரித்தார்

மாய ணத்தற மேறு தூமன மாம தித்திரு வாளருன்

னேய மல்கிய வாறுகண்களி னாறு மாண்பவர் காண்பரே.

35. மாறி லாமறை யுட்பொருள்தெளி வாகு மாரிட வாற்றலின்

வீறு சாற்றும றிக்கை யீட்டிலு தித்த வாதிரா மாயணம்

கூற லாலரி பாதூ! நின்னிறை வேத முன்னிறை யோதலும்

தேறு வார்குறி கொண்டதேமுது வேத முற்றுமு ணர்ந்திலார்.

36. நிற்க மும்மறை தாம வற்றினு மிக்கதாயரி பாதுகாய்!

கற்கு நின்குண வீட்ட மூட்டிரா மாயணம் மது காண்டுமே

எற்கு முற்சும னில்ல வள்ளணி யஞ்சி லம்பொலி விஞ்சுபூஞ்

சொற்க ளின்னிசை பாத வாதர வொண்மி குங்கவி வன்மிகன்.

37 கேச வன்னிரு தாண்ம லர்ச்சர ணேர்பு கற்குறு பேறெனத்

தேசு றச்சிர மீது பூணணி யேது மூதுவர் தேறுவார்

பூசை யாடா னாடு தாழ்சடை சூடு கொன்றையின் வாடையே

வீசு மப்பன தப்பதா வனி வீறு வாய்நிறை வாழ்த்துவாம்.

38 வந்தி னம்மின மாக நின்பணி வேலை வந்தனை தந்துனை

முந்து தம்முடி யேந்த வும்பர்கண் முன்னு றப்புரி பூசலுக்

கெந்தை மாலநி கேச னாதர வேத்தி ராஞ்சிவி லக்கநீ

டுந்து மவ்வரி பாதூ ! நின்பரி போற்ற வல்லவ ரார்கொலோ?

39 கல்ல தில்லெழில் தைய லுய்யலுஞ் சாடு நூறிடு தையலு

மொல்லை வானதி நாறலும் நிறை நீறதின் மனன் வீறலும்

சொல்ல தூதது செல்ல லும்பிற சொல்ல ரும்பல செய்யுமால்

தொல்ல டிக்கிணை யான்ற பேரளிதோன்று தாணிலை நண்ணுவன்.

40 பூவ னாளினி னாலு மோரிரு மூவி நாடியின் மூவுமத்

தேவ ராமவர் தாம வேமர்க ளேறு மையலி லையுற

மேவு தாழ்முடி மீது போதெதை யேந்து மாந்தரை நோக்குவார்

தாவு மாலிரு தாளி னண்பிணை யப்ப தாவனி நாடுவன்

Permalink
By  raguveeradayal thiruppathi   19:30 | 5/Oct/2007|0 Comment(s)
திருப்பாதுĨ 5;மாலை

2. திருநாமப்பத்ததி

21. என்னு ளக்களக் காதலை வென் றதாற்

பன்னு மெய்ப்பொரு ணாமர்க ளாம்புகழ்

மன்னு மால்பத மம்முனி யந்நிலை

யென்னு மச்சட சித்துக ளேத்துவன்.

22. தமமறுந் தமர்க டன்மத் தமிழ்மறை தலைமேற் றாங்காத்

தமியர்கள் குரவு தீரத் தண்ணளிப் பெரிய வள்ளல்

தமரெனத் திரும ணாள னவர்திறத் தருமை பூக்க

அமையுமச் சடகோ பன்தா னவனடி நிலையு மானான்.

23. திருமணிப் பாதூ ! நீதாங் கிருமறைக் கிறுதி யென்றே

விரிநிலத் திருவ முங்கி விளங்கரு ளரங்கன் தாணின்

றொருநலத் துடன்பி றந்தா ருயர்திணை வழுத்து மாறல்

விரதிநின் சடகோ பப்பேர் புனைந்திறை யுருவி ரித்தான்.

24. தொண்டர்கோ முனிவன் தானுந் தொடுகழற் பாதூ! நீயுங்

கொண்டதா லோது சீர்த்தி யொண்சட கோபப் பேராற்

பண்டுவாய் மொழிமு னோனாற் பகரதன் பொருளு முன்னால்

அண்டமீ திரண்டு மார்க்கு மாகுமா றாயிற் றன்றே.

25. கவிஞர்கட் கிறைவன் செந்நா வண்சட கோபன் பாடுஞ்

செவிகளுக் கினிய செஞ்சொல் லிசைகளா யிரமு மான்றோர்

செவிமடுத் தடிநி லாயுன் சீரொலி யமுத நாம

மலருளத் தினிக்கு மாறன் னவனதென் றொருமை யோர்வார்.

26. கேசவன் தமர்கள் வாழத் திருவெழும் பருவ மேழாய்

மாசறுத் தோங்கி யன்னா னாதரத் தாத ரேறுந்

தேசுடைச் சடகோ பன்பேர் நீசுமந் தவனின் மாணப்

பேசுருந் தொண்டு தானாம் பெற்றிநற் பாதூ! பெற்றாய்.

27. அரிமணத் தளிம மாகி யவன்பணி யுருத்த ரித்தாய்

குரைகழற் குறடி ரண்டாய்த் தொண்டிரு மடங்குகொண்டாய்

திருவடித் தொழும்பர் பாலுன் விருத்தியே விளங்கப் பின்னும்

நிரைதிருப் பாதூ! பூண்டாய் நீசட கோப னாமம்.

28. கவியுனைச் சடகோ பன்தான் பாடியாட் பட்டான் பாவால்!

அவனதின் னமுத நாம மணிந்தவற் காட்பட் டாய் நீ

உவகையிற் பொறைய யளந்தோ னும்மையா ளுடையனானான்

புவனநன் றுற்ற வெல்லா மூவர்நும் முனிமை யொன்றில்.

29. விந்தம டக்கிய விந்தையொ டுந்தொரு சிந்துவு றிஞ்சி யுடன்

வந்தழி மாயர்கள் மாய்ந்தழி தீயென வாண்மைவ ளர்ந்தெ ழுமா

சிந்தனெ னுங்குட முந்தன்மொ ழித்திரு வென்றுமி தொன்று ளதென

றந்தமு தன்மறை பாதுகை யச்சட கோபவ ணத்து மிழ்வாய்.

30. மன்னருண லந்திகழ ரங்கனணி பாதூ!

என்னிடையு னாயிரந டைக்கவிபி றக்கத்

தன்னடையி னல்குநல மல்குசட கோப

னென்னுமிது நாமமுன தேலுமிக மேலும்.

Permalink
By  raguveeradayal thiruppathi   16:21 | 5/Oct/2007|0 Comment(s)
திருப்பாதூĨ 5;மாலை


திருப்பாதுகையாயிரம்
1. பாயிரப்பத்ததி

1. பொலிக மாணிறை பூக்கும ரங்கமா
வலவ னேரணி யம்மணி பாதுகை
தலைகு லாவணி தாமணி வள்ளலா
ருலகு நோக்கும டித்துக ளுத்தமர்.

2. உத்தமத் திரும ணாள னுயர்பத நிலையி னுச்சி
இத்தலத் திலக வத்தன் னிலைதவச் சென்னி யேந்தி
அத்திறப் பத்தி நல்லார்க் காதியென் றோத நின்ற
வித்தகப் பரத நம்பிக் காமுதல் வணக்க மீதாம்.

3. வருணமா நளியி னாளும் வளநறும் வகுள நாறுஞ்
சுருதிசீர்ப் பகுதி முந்தைச் சந்தியின் பந்தி பூத்தோ
ரரிபதா வனியு னாம மணிந்தரி சரண நோக்கும்
குருகைமா முனிப ணிந்தே னுன்னையான் துதிக்க வேண்டி.

4. பொன்னிரும் பதியி னின்றுன் போனிலை புகுந்த வாணி
தன்னடைக் கிழமை நாடுந் தகைமுத னடையில் வைய
நன்னருள் பால தென்றே நாறுநன் மதிம லர்ந்த
வன்மிகத் தோன்றல் தெய்வ வாக்கெனக் கருள்வன் பாதூ !

5. நீசனா மெனது சென்னி மீதுமோர் வாசி யின்றித்
தோறா வாச வேதச் சிரமிசைப் பரமன் பாதூ !
வாசநீ கொண்டு மன்னக் கண்டுவான் மீகி போன்றார்
பேசுமுன் பெருமை யேபின் பேசினே னாசை யேறி.
6. நிவந்துபா ருவந்த ரங்க னடிநிலாய் ! படிய நின்கண்
உவந்தவான் மீகி பாட லொக்குமென் னாட றானும்
கவர்ந்துபார் பரவு கங்கை வாரியிற் கலந்த பங்க
மிவர்ந்தவார் தனக்குந் துய்ய வெமுனைக்கும் வாசி யென்னோ ?

7. அன்னதோ ரண்ண லோருன் கண்ணதென் றெண்ணு வண்ணக்
கன்னலா ரழுக்க றுக்கா வகப்புக ழுகப்புக் கூர
நின்னையே வழுத்த யானுன் னின்றுமுன் னின்பா லன்பா
யன்னைநீ யரங்கன் பாலா லபயமெற் கருள்கின் றாயே.

8 கடுகுநின் பரிவி லெண்ணா வடியனென் மதிபு குந்துன்
படியினின் துதியு திக்கும் பரியருள் புரியப் பாதூ !
கடைகால் தனத டிப்பூ நடையினீ நடத்து மாறுன்
படியிதொன் றெனவ ரங்க பதியிவ னொருவன் சான்றே.

9 தாங்கியேஎ ழவனி யாளுந் தனியிறைத் தனத டிச்சீ
ரோங்குமா லொருவ னத்தா ளொருத்திநீ பாது கத்தாய் !
யாங்குமே நடத்தித் தாங்கும் பாங்கய வரனுந் தேரா
ரீங்குவீண் புலமை வீங்கும் பிறர்க்கிது பன்ன வற்றோ?

10 செவிப்பெருந் திருவி ளங்கச் செறிதெருள் விரியுஞ் செந்நாச்
சவிப்பெருஞ் சதிரின் வண்ணச் சாடுவர் பாடு முன்கண்
கவிப்பெருங் கதிமி ழற்றிக் கதையிதுன் பிதற்று பேதைக்
குளிப்பினுக் குவந்து பாதுன் குறிப்பென மதிப்ப ரான்றோர்.

11. அறிவிலே னணவ நின்சீ ரணுவுமே தணிவு றாதே
வறியனே னிறையு முன்னீர் கனைமனத் திருவ னாவேன்
உறியநாச் சுனக னக்கிப் புனிதநீர்க் கங்கை பாதூ !
சிறிதுமே மாரு ணாதே யதனெடு விடாயுந் தீரும்.

12. ஒலிமிகுத் துழலுஞ் சூறா வளிகளு மலைக்க வொண்ணா
வலிமிகுந் தருவை வீழ்த்த வலித்துவா யூது வான்போல்
கலைமிகுங் கவிஞர் செஞ்சொற் கடந்தெழில் காட்டு முன்னைச்
சலமிலென் புகலஞ் சாறே பகரநா வலர்ந கைப்பார்.

13. அய்யமறக் கண்டுபொருண் மேன்மை தன்னோ
டதுமொழியுந் தனது மதித் தண்மை யுந்தன்
மெய்யகமே றரங்கநக ரப்பன் செந்தா
ணிலையணவு மார்வமதே சார்வொன் றாக
நய்யவரை யறைகளறக் கலைத்து நாவே
மலருமிதழ் மதலையென மகிழ்ந்து பாடச்
செய்யருளவ் வடிநிலையே சுவைக்குஞ் செவ்வாய்ச்
சீரினிறை வேங்கடவன் பாடு வானே.

14. நித்திலநே ரொத்திலகு நாதன் பொற்றா
ணிலை ! யுனது தலைவையத் தறைய நின்றேற்
கொத்தனளிர் மதிச்சடையன் சிகரஞ் சாய்த்து
நுகரவெழு மபரிமிதப் பெருமி தத்தார்
புத்தெழிலத் திரிபதகை புவியும் வானும்
புகழநடை விரைவினெகிழ் வேகம் வெள்கு
மத்திறநின் னாரமுதத் தளையி னாதம்
வளங்கொளநா வீறொலிநீ வழங்கு வாயே.

15. ஆடிய நோன்பிலே னாயினு மன்னா
னாடிய பாதுனை நான்முடி சூடிச்
சேடிம யந்நள சேதுவி னூடே
பாடிய வள்ளல ருள்கலந் தேனே.

16. போதமெ ழுந்திரு வேதமொ ழிக்கே
யோதரு மாதவன் பாதுகை யுன்னைப்
பீதியி லாதவென் பேதமை பாடப்
போதிது போகென வப்பனு வப்பன்.

17. நல்கரி பாது !நிற் கென்றொரு கற்பிற்
பல்குவி ருத்திவி கற்புப யக்குந்
தொல்கவி வேங்கட வன்கலை வாணி
மல்களி நீகொள ரங்கினி லாடும்.

18. எண்ணவ னப்பரு நின்னரு ளெண்ண
வென்னுட னற்றொடை கோடியி சைக்கும்
பண்ணல மாயினு மாதிரி காட்டப்
பண்னரி பாதுன தாயிர மீதாம்.

19. மாவொட ரங்கன வைக்கண்வி ழிப்பிற்
பாவிது தன்செவி யாரநு கர்ந்தே
தாவிய ணைக்கம ராடியு னாதங்
கூவுமெ னாமனங் கோயினீ கொள்வாய்.

20. நோற்றியான் பாதுனைப் போற்றுபா மாலையீ
தாற்றலே சாலரங் கேசனார் தாளிணைத்
தோற்றலே சாற்றுமன் னாண்சரண் கொண்மலர்
போற்றுமா தித்தர்பூஞ் சென்னிமேற் போலதே.

Permalink
By  raguveeradayal thiruppathi   18:13 | 2/Oct/2007|0 Comment(s)
திருப்பாதுĨ 5;மாலை

திருப்பாதுகமாலை

வேதமுடி யேறுதிரு வீறுபெறு மாறன்
றாதியரி யோதுகவி வாதியரி யென்றே
கோதுகல மீதுதலை கோடிமறை பாடச்
சோதியரு ணீதிநெறி வேதியனு தித்தான்.

ஓதியரு மறைதானே யோதுமறை தானாகி
ஓதுமறை முடிப்பொருளாய்த் தனைநல்கு மோரிறைவன்
பாதமலர் தாங்குமதிப் பெருங்காதற் பாதுகமீ
தோதுதிரு வாயிரநூ லோங்குகசீர் பல்லாண்டே.

ஒருதனை யொக்க மிக்க வொருவரிங் கற்ற வுண்மை
தெரியிரு மறையி னுச்சி யிறைமைகூ றொருமை நாமக்
குருவர னொருக னாவிற் குணநிதி யரங்க நாதன்
குரைகழ னிலைகு லாவுங் குணமொழி வழங்கி வாழ்வாம்.

போதநால் வேத நாவொன் றொழிந்தவே றெந்த நாக்கொண்
டாதிமா வரங்க நாதன் பாதுகப் புனித மீக்கூற்
றோதுமா றென்ற தோர வோருமம் மறையி னோங்கற்
சோதிவாய் மலர்ந்து மிழ்ந்த சுடர்மொழிச் சோதி வாழி.

விரி யாயிர முடி யேறிய விழி யாயிர மெனமூ
துரை யாதிய னிறை யாய்மறை முடி யாய்திரு வடியா
யிர மாரரு ளது தானிறை நிலை தேறிய நலனே
தெரி யாயிர மறை நாறிய பெரி யாரருள் பெறுவாம்.

இர வென்றொரு பொரு வில்வரு மிர வில்லுரி மறைவில்
தர வென்றள வறு தண்ணளி தரு தன்னொளி நிறைவில்
இரு வையக வள வென்றொரு கள வன்றரு ளிறைவன்
சர ணன்றறை மறை மாணிறை நிறை தாளிணை பணிவாம்.

Permalink
By  raguveeradayal thiruppathi   18:03 | 2/Oct/2007|0 Comment(s)
திருப்பாதுĨ 5;மாலை

ஸ்வாமி தேசிகன் அருளிச்செயல்களிலே ஒரு ரத்னம் எல்லோரும் சிரமேல் கொண்டு போற்றும் உன்னதமான ஸ்தோத்ரம் "ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்" அதை ஸ்ரீ கேசவ ஐயங்கார் மிக அழகாக தமிழ் படுத்தியுள்ளார். 1950ல் திருப்புல்லாணியில் வெளியிட்ட அந்நூலை சிறிது சிறிதாக தொடர்ந்து பதிவு செய்கிறேன். தமிழ் ஆர்வலர்கள் படித்து இன்புறலாம்

http://namperumal.wordpress.com

Permalink