31. யாங்கு யர்ந்தவர் யாவருந் தாழ்வரோ
யாங்கு தாழ்ந்தவர் யாருமு யர்வரோ
ஓங்கு மாதவ ரோம்பும ரங்கனப்
பூங்க ழன்மணி பாதுகை போற்றுவன்.
32. பம்பு மம்பர முற்று மித்தல முற்ற பத்திர மாயினு
மிம்ப ரார்கலி யேழு சேர்ந்துதெ ரித்த லாமசி யாயினுங்
கொம்ப னாயிர வாய னேயவ னோது வானென வாயினும்
கம்ப ரன்மணி பாது கப்பணை தான்வ ரைதலு மேலுமே.
33. ஓது மாமறை கோத றத்தெளி வாகு பாவரு மோகையில்
நாத மேதினிக் காதி னந்தன னாதி காவியந் தன்னொடும்
போத வேதவி யாத னோதியவேத மாகிய பாரதம்
பாதூ ! நின்பரி காணுமெம்மனோர் கண்ணிரெண்டென வொண்ணுமே.
34. மாய னங்கள ரங்க னங்கிரி தாங்கு பாதுகை! யோங்குநிற்
காய நன்றுசு ருக்கு வித்தர வாய்வி ருத்திவி ரித்தார்
மாய ணத்தற மேறு தூமன மாம தித்திரு வாளருன்
னேய மல்கிய வாறுகண்களி னாறு மாண்பவர் காண்பரே.
35. மாறி லாமறை யுட்பொருள்தெளி வாகு மாரிட வாற்றலின்
வீறு சாற்றும றிக்கை யீட்டிலு தித்த வாதிரா மாயணம்
கூற லாலரி பாதூ! நின்னிறை வேத முன்னிறை யோதலும்
தேறு வார்குறி கொண்டதேமுது வேத முற்றுமு ணர்ந்திலார்.
36. நிற்க மும்மறை தாம வற்றினு மிக்கதாயரி பாதுகாய்!
கற்கு நின்குண வீட்ட மூட்டிரா மாயணம் மது காண்டுமே
எற்கு முற்சும னில்ல வள்ளணி யஞ்சி லம்பொலி விஞ்சுபூஞ்
சொற்க ளின்னிசை பாத வாதர வொண்மி குங்கவி வன்மிகன்.
37 கேச வன்னிரு தாண்ம லர்ச்சர ணேர்பு கற்குறு பேறெனத்
தேசு றச்சிர மீது பூணணி யேது மூதுவர் தேறுவார்
பூசை யாடா னாடு தாழ்சடை சூடு கொன்றையின் வாடையே
வீசு மப்பன தப்பதா வனி வீறு வாய்நிறை வாழ்த்துவாம்.
38 வந்தி னம்மின மாக நின்பணி வேலை வந்தனை தந்துனை
முந்து தம்முடி யேந்த வும்பர்கண் முன்னு றப்புரி பூசலுக்
கெந்தை மாலநி கேச னாதர வேத்தி ராஞ்சிவி லக்கநீ
டுந்து மவ்வரி பாதூ ! நின்பரி போற்ற வல்லவ ரார்கொலோ?
39 கல்ல தில்லெழில் தைய லுய்யலுஞ் சாடு நூறிடு தையலு
மொல்லை வானதி நாறலும் நிறை நீறதின் மனன் வீறலும்
சொல்ல தூதது செல்ல லும்பிற சொல்ல ரும்பல செய்யுமால்
தொல்ல டிக்கிணை யான்ற பேரளிதோன்று தாணிலை நண்ணுவன்.
40 பூவ னாளினி னாலு மோரிரு மூவி நாடியின் மூவுமத்
தேவ ராமவர் தாம வேமர்க ளேறு மையலி லையுற
மேவு தாழ்முடி மீது போதெதை யேந்து மாந்தரை நோக்குவார்
தாவு மாலிரு தாளி னண்பிணை யப்ப தாவனி நாடுவன்